ஆண்டுத்தோறும் இந்தியாவில் செப்டம்பர் 5 ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை தேசிய ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த தினத்தில், அரசானது சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, நல் ஆசிரியர்கள் விருதுகளையும் வழங்கி கவுரவித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளி ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்கும் நோக்கில் சிறப்பு செய்தி ஒன்றையும் தெரிவித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, அரசு பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பணியுடன் சேர்த்து, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் ( EMIS ) நாள்தோறும் பள்ளிகளில் நடைபெறும் புதிய நிகழ்வுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால், கற்பித்தல் பணி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, அன்பில் மகேஷ் அவர்கள் “இன்னும் 2 மாதங்கள் பொறுத்து கொள்ளுங்கள், EMIS-க்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களின் 5 கோரிக்கைகள் நிறைவேற்றம்? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!!