பலசரக்கடையில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்.., உரிமையாளர் கண்களில் மண்ணை தூவிய சம்பவம்!!

0
பலசரக்கடையில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்.., உரிமையாளர் கண்களில் மண்ணை தூவிய சம்பவம்!!
பலசரக்கடையில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்.., உரிமையாளர் கண்களில் மண்ணை தூவிய சம்பவம்!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், இந்த கொலை, கொள்ளை, திருட்டு போன்றவைகள் மற்றும் இன்னும் மாறாமல் இருந்து வருகிறது. அரசு எவ்வளவோ தண்டனையை உயர்த்தினாலும் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் ஒரு ஆசாமி திருடி சென்ற சம்பவம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் ஒரு பலசரக்கு கடை செயல்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த கடையில் வழக்கம் போல் நேற்றும் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி ஒரு ஆசாமி முதலில் 5 லிட்டர் சமையல் எண்ணெய் எடுத்து, அதை பைக்கில் வைத்து, திரும்பவும் கடைக்குள் சென்று சிக்கியதையெல்லாம் எடுத்து தனது பைக்கில் வைத்து புறப்பட்டு சென்றார்.

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு குட் நியூஸ்., புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய RBI!!!

இதனை தொடர்ந்து உரிமையாளர் புகார் கொடுத்த நிலையில் போலீஸ் விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து விசாரித்த போது திருடன் பயன்படுத்திய பைக் நம்பர் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த ஆசாமியை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here