உலகம் முழுவதும் காதல் என்ற பெயரில் பல்வேறு வினோத சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள நாகேஸ்வரராவ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த பவன் என்பவருடன் நீண்ட நாள் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
பின் இருவரும் தனியாக வீடு எடுத்து பவனிடம் இருந்த நகை, பணத்தை வைத்து லிவிங் டு கெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களின் போக்கை கண்டித்ததால் நாகேஸ்வரராவ், வாழ்நாள் முழுவதும் இருவரும் பிரியாமல் இருக்க, ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பலசரக்கடையில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்.., உரிமையாளர் கண்களில் மண்ணை தூவிய சம்பவம்!!
இதை நம்பி பவனும் நான் பெண்ணாக மறுக்கிறேன் என கூறி அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். அதன் பின் நாகேஸ்வரராவிடம் இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என பவன் கூறியுள்ளார். ஆனால் நாகேஸ்வர ராவ் நீ அழகாக இல்லை என கூறி திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த பவன் கிருஷ்ண லங்கா காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி மீது மோசடி, துரோகம், திருநங்கைகள் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.