இன்றைய காலகட்டத்தில் பலரும் தனிநபர் கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை EMI முறையில் அசல்+வட்டியுடன் செலுத்தி வருகின்றனர். இந்த கடன்களின் வட்டி விகிதம் ரெப்போ வட்டியை பொறுத்து மாறுபடுவதால், மாதந்தோறும் EMI-யும் மாறுபடுகிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வங்கிகள் வழங்காமல் உள்ளதால் பலரும் குழப்பத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி வங்கிகள்,
- EMI தொகை மற்றும் கடன் கால அளவை வாடிக்கையாளர்களே முடிவு செய்ய வேண்டும்.
நிலையான வட்டி விகிதத்திற்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
- வழக்கத்தை விட வட்டி உயர்ந்தால், அது தொடர்பான அறிவிப்பை தெரிவிக்க வேண்டும்.
- முன்கூட்டியே கடனை பகுதி அளவோ அல்லது முழுவதுமாக செலுத்தும் வாய்ப்பையும் வழங்க வேண்டும்.
- ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் பாக்கி உள்ள EMI மற்றும் கால அளவுக்கான அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
- மேலும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இந்த விதிமுறைகளை பின்பற்றபடுவதாக வங்கிகள் உறுதி அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
“தற்கொலைகளை தடுப்பதை விட நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்”…, அன்புமணி ராமதாஸ் காட்டம்!!