ஜனார்தனனின் சூழ்ச்சியில் விழும் ஜீவா – அதிர்ச்சியில் மூர்த்தி! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டில் ஜீவாவை பார்க்கும் மூர்த்தி ஒரு வகையில் சந்தோஷப்பட்டாலும், மறுபுறத்தில் ஜீவா தன்னை விட்டு பிரிந்து போவதாக உணருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்றைய தொடரில் காலேஜிலிருந்து ஐஸ்வர்யாவை கண்ணன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். வீட்டில் தனம் மேலுள்ள அக்கறையில் “கவனமா இருக்கணும் தனம், இல்லன்னா நீ நம்ம வீட்டுக்கு வந்துடு” என்று தனத்தின் அம்மா கூறுகிறார். தொடர்ந்து அவர்கள் வீட்டில் இருக்கும் கஸ்தூரியின் அம்மாவையும், ஐஸ்வர்யாவையும் பற்றி குறை கூறுகிறார் தனத்தின் அம்மா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கஸ்தூரிக்கும் அவங்களுக்கும் ஒரே சண்டை என அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே அங்கு வரும் கண்ணன், அவர் பேசியதையெல்லாம் கேட்டு விடுகிறார். பின்பு கடைக்கு வரும் மூர்த்தியிடம் தனத்தை பற்றி விசாரிக்கிறார் குமரேசன். கடை கல்லாவில் பணத்தை காணவில்லை என மூர்த்தி கேட்கையில் வியாபாரம் அவ்வளவு தான் என கதிர் கூறுகிறார்.

சர்வதேச டி 20 போட்டி – கேப்டன் விராட் கோலியின் புதிய சாதனை!!

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கடைக்கு வரும் கஸ்டமர் ஒருவரை, இன்னொருவர் வந்து ஜனார்த்தனன் கடைக்கு போக சொல்லி அனுப்பி விடுகிறார். இது தான் காலையில இருந்தே நடக்குது என குமரேசன் கூற மூர்த்தியின் முகம் வாடி விடுகிறது. பின்பு ஜனார்த்தனன் கடையில் ஜீவாவை பார்த்த மூர்த்தி வருத்தப்படுகிறார்.

மீனாவிடம், ஜனார்தனனை கடைக்கு வர சொல்லி போன் செய்ய சொல்கிறார் ஜீவா. தனத்தை விசாரிக்க வீட்டிற்கு வரும் கஸ்தூரி கவனமாக இருக்க சொல்லி தனத்தை பயமுறுத்துகிறார். தனத்தை பார்க்க தானே வந்தீங்க அவங்ககிட்ட ஆறுதலா பேசுங்க சித்தி என ஐஸ்வர்யா கூற, ஐஸ்வர்யாவை கண்டபடி திட்டுகிறார் கஸ்தூரி.

ஐஸ்வர்யாவை திட்டாதீங்க என தனம் கூற, நான் அப்படி தான் திட்டுவேன், எங்க அக்கா பெத்துப்போட்டு போய்ட்டா, இவளை நான் சுமக்கணுமா என கஸ்தூரி கூறுகிறார். அழுது கொண்டே வெளியே எழுந்து செல்லும் ஐஸ்வர்யாவை கண்ணன் சமாதானப்படுத்துகிறார். கடையில் குமரேசன் பாடிக்கொண்டே, கதிரை ஆட சொல்லி கூப்பிடுகிறார்.

கிளாமரில் மிரட்டும் பிக்பாஸ் கேபிரியல்லா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

கடையில் வியாபாரம் ஆகவில்லை என வருத்தப்படுகிறார்கள் மூர்த்தியும் கதிரும். ஜீவாவை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்ததை கதிரிடம் கூறுகிறார் மூர்த்தி. உங்க ரெண்டு பேரையும் இப்படி கல்லாவில் உட்கார வைக்க முடியாதுல்ல என கூறி வருத்தப்படுகிறார் மூர்த்தி. இத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here