மீண்டும் பள்ளிக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் – பல ஸ்வாரஸ்யங்களுடன் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் முல்லை கதிர் இடையே சண்டைகள் இருந்து வந்தது. அதனால் கதிரை மீண்டுமாக பள்ளிக்கு படிக்க அனுப்பியுள்ளார் முல்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் தற்போது பல சுவாரஸ்யங்களுடன் நகர்ந்து வருகிறது. முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல்வேறு குழப்பங்களும் பிரச்சனைகளும் காணப்பட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் இடத்தை எப்படியாவது வாங்க வேண்டும், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் கட்ட வேண்டும் என மூர்த்தி குடும்பம் முழுவதும் போராடிக்கொண்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இடையில் ஜனார்த்தனன், மீனா பெயரில் புதிய சூப்பர் மார்க்கெட் கட்டி கடுப்பாக்கி கொண்டிருந்தார். பிறகு கண்ணன் வீட்டிலிருந்த பணத்தை திருடியதால் முல்லைக்கு பிரச்சனை உருவாகியது. இப்படி இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலினால் ரசிகர்கள் சற்று அதிருப்திக்குள்ளாயினர்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை மீண்டுமாக குஷியாக்கும் விதத்தில் முல்லை கதிர் ரொமான்டிக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. புதிய முல்லையுடன் ஒளிபரப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் – முல்லை ரொமான்டிக் காட்சிகள் அதிகம் இடம்பெறவில்லை.

இதே நாளில் சேவாக் செய்த சாதனை – மெமரிஸ் பிரிங் பேக்!!

இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்தனர். அதன்படி இந்த வாரம் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோவில் முல்லை – கதிரின் பல ரொமான்டிக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் கதிருக்கு படிக்க ஆசை இருக்கிறதா என முல்லை கேட்க அதெல்லாம் எதுக்கு என கதிர் சொல்லுகிறார்.

அப்படியா, என் கண்ண பாத்து சொல்லுங்க என முல்லை கூற உன் கண்ண பாத்து பொய் சொல்ல முடியாது என கூறிவிட்டு ஆமாம் படிக்க ஆசை இருக்கு என கூறுகிறார் கதிர். கதிரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரை மீண்டுமாக பள்ளியில் சேர்த்து விடுகிறார் முல்லை. இவ்வாறு வெளியாகியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ கதிர் – முல்லை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here