இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் என்ன தான் கொரோனா தடுப்பூசி அதிகமாக மக்களுக்கு செலுத்தி வந்தாலும் கொரோனா தொற்று 50 ஆயிரம் அல்லது 60 ஆயிரத்தை தாண்டி வந்தது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வந்தனர். மேலும் நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 68,020 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1,20,39,644 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனவால் 291 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,61,843 ஆக அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து சுமார் 35,498 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,13,55,993 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 5,21,808 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தி வந்தாலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.