விஜய் டிவியில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டுள்ளது. மேலும் கதிர், முல்லையும் நல்லபடியாக வாழ்க்கையையும் ஆரம்பித்துள்ளனர். இன்றைய எபிசோடில் கண்ணா, குழந்தையை பார்க்க வர ஜனார்த்தனன் அவர்களை தடுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிருக்கும், முல்லைக்கும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து முதலிரவிற்கு ஏற்பாடுகள் செய்தனர். ஆனாலும் கதிரின் செய்கைகளால் சொதப்பலாகி கடைசியாக முல்லையை சமாதானம் செய்து தனது வாழ்க்கையையும் தொடங்கினர். இது அவர்கள் விருப்பம் மட்டுமல்ல ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பமும் கூட.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் ஜீவா நடந்தவற்றை கூற மீனாவும் சிரிக்கிறார். அதன் பிறகு தன் ரூமில் தான் தங்கியிருக்கிறார் என்று சொன்னதும் மீனா கோவமடைகிறார். யாரை கேட்டு அங்கே தங்கவைத்தாய் என்று சண்டையும் இடுகிறார். எப்படியோ சமாளித்து ஜீவாவும் அங்கிருந்து நகர்கிறார்.
இன்றைய எபிசோடில் ஜீவாவுடன், கண்ணா குழந்தையை பார்க்க ஆசையாக மீனா வீட்டிற்கு செல்கிறார். குழந்தைக்காக தான் சேர்த்து வைத்த பணத்தில் விளையாட்டு பொருட்களை வாங்கியும் வருகிறார். இந்நிலையில் ஜனார்த்தனன் குழந்தையை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும் கோவமடைகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மீனாவிடம் குழந்தையை காட்ட வேண்டாம் என்றும் கூறுகிறார். வெளியில் வந்து குழந்தை தூங்குகிறது என்று சொல்ல இதனால் கோவமடையும் ஜீவா, கண்ணாவை உள்ளே அழைத்து சென்று குழந்தையை காட்டுகிறார். மேலும் மீனாவிடம் இந்த மாதிரி திரும்ப நடந்தால் உன்னையும் குழந்தையையும் கூட்டிட்டு போயிடுவேன் என்று மிரட்ட மீனா தன்னால் வர முடியாது என்று கூறுகிறார்.
மேலும் குழந்தையை தொட்டிலில் போடும் நிகழ்ச்சி எப்பொழுது வைப்பது என்று கேட்க வீட்டில் கேட்க வேண்டும் என்று சொன்னதும் மீனா ஜனார்த்தனன் கோவமடைகின்றனர். மேலும் அவர்கள் சென்றதும் ஜீவாவை எப்படியாவது நம் பக்கம் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிடுகின்றனர். அடுத்ததாக வழக்கம் போல கதிர் முல்லை ரொமான்ஸ் சீனும் இடம் பெறுகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.