தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நவம்பர் 16) வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். சென்னையில் மாநகராட்சி ஆணையர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.
வாக்களர் பட்டியல் வெளியீடு:
இன்று முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வசதிக்காக இம்மாதம் 21 மற்றும் 22 ஆம் தேதிகளிலும், டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் அளித்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை கட்டாயமாக எடுக்கப்படும். தேர்தல் கமிஷனும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக உள்ளனர்.
வரும் 2021 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து 18 வயது முடித்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதை தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி, இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை ஒரு மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.