பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன், ஐஸ்வர்யா திருமணம் செய்ததில் இருந்தே வீடு சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில் தற்போது அவர் இன்றைய எபிசோடு இறுதியில் லட்சுமி சீரியஸாக இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன், ஐஸ்வர்யா திருமணம் நடந்ததில் இருந்தே வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. கண்ணனுக்கு இப்பொழுது தான் வீடு கிடைத்துள்ள நிலையில் கையில் இருக்கும் காசை வைத்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
அப்பொழுது தனம் மூர்த்தி அதனை பார்த்து விட அவர்களை பார்த்து முறைத்து விட்டு செல்கின்றனர். ஆனால் தனத்திற்கு சுத்தமாக மனசே கேட்கவில்லை. ஜீவா கதிரிடம் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதனையும் கொடுக்கின்றனர்.
வீட்டிற்கு வெளியே இருக்கும் பொருட்களை பார்த்து விட்டு கண்கலங்கும் கண்ணன் ஜீவாவின் கையெழுத்தை பார்த்து விட்டு கண்கலங்குகிறார். இன்றைய எபிசோடு முழுக்க கண்கலங்க வைக்கும் காட்சிகள் தான் நடைபெற்றது. இந்நிலையில் தான் அடுத்த வாரத்திற்கான எபிசோடை வெளியிட்டுள்ளனர்.
அதாவது கண்ணனை நினைத்து புலம்பி கொண்டிருக்கும் லட்சுமி மூச்சு பேச்சில்லாமல் இருக்க அனைவரும் பதறுகின்றனர். லட்சுமி பிழைப்பாரா?? மாட்டாரா?? என்ற சந்தேகம் அனைவருக்குமே உள்ளது. இனி வரும் நாட்களில் தான் லட்சுமி உடல்நிலை பற்றிய தகவல் தெரியும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்