எல்லாத்துக்கும் அந்த கண்ணன் தான் காரணம்.., நல்ல நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்பேன்.., கொந்தளித்த முல்லையின் அம்மா!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் கதிரை பார்த்து முல்லை வருத்தப்பட அனைவரும் அவரை சமாதானப் படுத்துகின்றனர். அந்த நேரத்தில் முல்லையின் அம்மா எல்லாத்துக்கும் காரணம் அந்த கண்ணன் தான். அவன் என் கையில் கிடைக்கட்டும் நல்ல நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்பேன் என்று திட்டுகிறார். இதையெல்லாம் கண்ணன் ஓரமாக நின்று பார்க்க, ஜீவா பாவம் என்று சொல்ல தனம் உள்ளே வர சொல்ல கையெடுத்து கும்பிட்ட படி அழுது கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார் கண்ணன்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பின் எல்லோரும் உள்ளே செல்ல ஜீவா தயங்குகிறார். அப்போது தனம் அவரை உள்ளே அழைத்து செல்கிறார். அடுத்ததாக கண்ணன் வருத்தப்பட அவரை ஐஸ்வர்யா சமாதானப்படுத்துகிறார். மேலும் என்னால குடும்பம் நடத்த முடிஞ்சுதா? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்காம இருந்திருக்கலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி ஆகிறார். அடுத்ததாக மூர்த்தி குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். அப்போது மூர்த்தி அனைவருக்கும் சாப்பாடு உருட்டி கொடுக்கிறார்.

தோனி ஜடேஜாவின் ஐபிஎல் சிறந்த தருணம்…, டி-ஷர்ட் வடிவில் வெளியீடு!!

அடுத்ததாக மீனாவும் ஜீவாவும் கிளம்ப, தனம் வேண்டாம் என்று சொல்ல மீனா கயல் தனியாக இருப்பா என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். பிறகு ஐஸ்வர்யா கண்ணனிடம் ஒரு வழியா கடன் பிரச்சனை முடிஞ்சு என்று சொல்ல அப்போது கஸ்தூரி அங்கு வருகிறார். ஐஸ்வர்யாவிடம் அந்த கிரெடிட் கார்டு பஞ்சாயத்தை நீங்க முடிச்சிட்டீங்க, ஆனா கார்டில் வாங்குன பணத்தை மட்டும் தானே நீங்க முடிச்சு இருக்கீங்க இனி என்கிட்ட வாங்குன பணத்தை எப்படி கொடுக்க போறீங்க என்று கேட்க, ஐஸ்வர்யாவும், கண்ணனும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here