பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் மீனா, தனம், முல்லை அனைவரும் வளைகாப்புக்கு பணத்தை செலவழிச்சீங்களே அந்த பணம் திரும்ப கிடைக்குமா என்று ஐஸ்வர்யாவிடம் கேட்கின்றனர். அடுத்ததாக தனம் யார்கிட்டயும் நீங்க கடன் வாங்குனீங்களா? என்று கேட்க ஐஸ்வர்யா இல்லை என்று பொய் சொல்கிறார். ஆனாலும் தனம், மீனா, முல்லை மூவரும் மாறி மாறி கேட்க ஐஸ்வர்யா நாங்க வேற யார்கிட்டயும் கடன் வாங்கல. நாங்க வச்சிருந்த சேமிப்பு மூலமா தான் செலவு செஞ்சோம் என்று கூறுகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அடுத்ததாக கண்ணன் வீட்டுக்கு வர அவரிடமும், தனம் பணத்திற்காக கடன் வாங்குனீங்களா என்று கேட்க அவரும் இல்லை என்று சொல்கிறார். பின் மூர்த்தி வீட்டுக்கு சாப்பிட வர தனம் ஐஸ்வர்யா, கண்ணனை சாப்பிட கூப்பிடுகிறார். சாப்பிடும் போது ஐஸ்வர்யா வழக்கம் போல ஹலோ பிரண்ட்ஸ் என்று சொல்ல மூர்த்தி கோபப்படுகிறார். இப்படி எல்லாம் வீடியோ எடுக்காதன்னு எத்தன வாட்டி சொல்லியும் திருந்த மாட்டீங்களா, நிம்மதியா சாப்பிடக்கூட விட மாட்டீங்க என்று திட்டிவிட்டு செல்கிறார்.
இதனால் தனம், முல்லை ஐஸ்வர்யாவை கண்டபடி திட்டுகின்றனர். இந்த பக்கம் மீனா, ஜீவா பேசிக்கொண்டிருக்க, அப்போது ஜனார்த்தனன் காரின் புகைப்படங்கள் சிலவற்றை காட்டி எது புடிச்சிருக்கு என்று கேட்க அவர்களும் பார்த்து சொல்கின்றனர். இதை கேட்டு ஜனார்த்தனன் இந்த காரை தான் உங்களுக்கு புக் பண்ணிருக்கோம் என்று சொல்ல மீனாவும், ஜீவாவும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.