ஜீவா வந்து கூப்பிடாமல் அந்த வீட்டிற்கு வர மாட்டேன் – முல்லையிடம் கொந்தளிக்கும் மீனா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனம் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் மீனா கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்கிறார். அவரை சமாதானம் செய்யப் போகும்போது நடந்த பிரச்சனையால் தனம் சத்யமூர்த்தியிடம் உண்மைகளை சொல்ல அவரும் சந்தோஷமடைகிறார். ரசிகர்களும் குடும்பத்தினருடன் எப்பொழுது சொல்லப் போகிறார் என்றும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முந்தைய எபிசோடில் நீண்ட நாட்களுக்கு பிறகு கதிர், முல்லை ரொமான்ஸ் பார்க்க முடிந்தது. போன வருட பிறந்தநாளுக்கு கதிர் முல்லைக்கு ஜிமிக்கி வாங்கிக் கொடுத்து அசத்தினார். இந்த வருடம் வித்தியாசமாக அரிசி, பருப்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை எழுதி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இருவரும் கோவிலுக்கும் சென்றனர். கோவிலில் எதிர்பாராத விதமாக கைகோர்த்துக் கொண்டு செல்ல முல்லைக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இன்றைய எபிசோடில் கதிர் கோவிலில் முல்லை பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்கிறார். சாமி கும்பிட்டுவிட்டு வெளியே அமர்ந்திருக்கின்றனர். அப்பொழுது கதிர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு முல்லை தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்கிறார்.

கதிரும் மாமா கிட்ட கேட்க என்ன தயக்கம் என்று சொல்ல முல்லைக்கு ஷாக் ஆகிறது. மேலும் சென்னைக்கு மறுபடியும் போக வேண்டும் என்று சொல்கிறார். கதிரும் சரி என்று கூற முல்லை மீனாவின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு கதிரும் தான் வெளியே நிற்பதாக சொல்கிறார். அதெல்லாம் நல்லா இருக்காது என்று வற்புறுத்தி அழைத்து செல்கிறார் முல்லை.

சிகிச்சைக்காக லட்சுமியுடன் சென்னைக்கு செல்லும் கண்ணம்மா – பாரதியை பார்ப்பாரா??

வீட்டிற்கு போக அவர்களை உபசரிக்கிறார் கலை. மீனாவும் உள்ளே இருந்து வர முல்லை குழந்தையை வாங்கி கொஞ்சுகிறார். கதிர் குழந்தையை வாங்கிக்கொண்டு வெளியே போக முல்லை கோவத்தை விட்டுவிட்டு வீட்டிற்கு வாங்க என்று சொல்ல மீனா ஜீவா வந்து அழைத்தால் தான் வருவேன் என்று சொல்கிறார்.

இல்லையென்றால் நான் வீட்டை விட்டு வந்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றும் கூறுகிறார். மேலும் முல்லை எவ்வளவு சமாதானம் செய்தும் மீனா ஏற்றுக் கொள்ளவில்லை. முல்லையும் கதிரும் வேலை இருப்பதாக சொல்லி வீட்டிற்கு கிளம்புகின்றனர். அடுத்ததாக மூர்த்தி தனது கடையில் வேலை பார்க்கும் அவரது மாமாவை பார்த்து பேச தனக்கென்று யாரும் இல்லை என சொல்லி வருந்துகிறார்.

அதற்கு மூர்த்தியும் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதலும் சொல்கிறார். அடுத்ததாக மீனா குழந்தையிடம் பேசிகொண்டுள்ளார். தனது அம்மா இப்பொழுது கோவத்தில் உள்ளார். கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி அம்மாவிற்கு கால் செல்கிறார். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு போனை வைக்கிறார். அதோடு எபிசோடும் முடிவடைகிறது. இப்படி எத்தனை நாட்கள் தனம் கர்ப்பமானதை வீட்டில் சொல்லாமல் மறைக்க போகிறாரோ தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here