தற்போது “பாண்டியன் ஸ்டோர்ஸ் ” சீரியலில் முல்லை கர்ப்பமடைத்ததை தொடர்ந்து மகிழ்ச்சியாக கதைக்களம் நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் தனத்திடம் கதிர் ” முல்லை கர்ப்பமாக இருக்கிறாள் ” என்று கூறுகிறார். இதைத்தொடர்ந்து, மீனா ,ஐஸ்வர்யா இருவரும் மிக மகிழ்ச்சியடைந்தனர். கதிர் தனத்திடம் ” முல்லை Pregnancy card மூலம் செக் செய்திருக்கிறாள்,பிறகு ஹாஸ்பிடல் போயும் செக் செய்திருக்கிறார் என சொல்கிறார். தனம் முல்லையிடம் “எதற்கு தனியா போன “, என்னை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல என கடிந்துகொள்கிறாள். முல்லை “நான் கர்ப்பமாக இருக்கிறேன்னு சொல்லிட்டு இல்லையென்றால் உங்களுக்கு கஷ்டமா இருக்கும்ல அதான் சொல்லல ” என்று கூறுகிறாள்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பின்னர் அனைவரும் இனிப்பை ஊட்டிவிட்டு மகிழ்கின்றனர்.அடுத்து ஜீவாவும் கண்ணனும் வருகின்றனர்.ஜீவா கதிரை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறார். சந்தோஷத்தில், கண்ணன் கதிருக்கும், முல்லைக்கும் வாழ்த்து கூறுகின்றார். கண்ணன் முல்லையிடம் ” இதற்காக நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பீங்க உங்களுக்கு பலன் கெடச்சுடுச்சு ” என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.
அஜித் படத்தால் நேர்ந்த உயிரிழப்பு.., சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!!
பின்னர் அனைவரும் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். தனம் முல்லையிடம் ” ஏன் நீ சொல்லல ” என்று கேட்கிறாள்.முல்லை ” மீனாதான் எல்லா ரெண்டுகோடும் கர்ப்பம் இல்லை என்று கூறினாங்க ” என்று சொல்கிறாள். மீனா ” நான் பொதுவாத்தான் சொன்னன் ” என்று சொல்லுகிறார். பின்னர் முல்லை அம்மா அப்பாவும் வருகின்றனர். அவர்களும் முல்லையிடம் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது என்று கூறுகின்றனர். மீனா ” பார்வதியிடம் இனிப்பை எடுத்துக்கொள்ள சொல்கிறாள். பார்வதியும் முல்லையின் அப்பாவும் முல்லைக்கு இனிப்பை ஊட்டிவிட்டு மகிழ்கின்றனர். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.