நடிகர் விஜய்க்கு இவங்க நாலு பேர்தான் நண்பர்கள் என்றும், அதுல இவர் இன்னும் ரொம்ப க்ளோஸ் என்றும் அவரது தாய் ஷோபா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ஷோபா உருக்கம்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், குறித்த தனிப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் வெளி உலகத்திற்கு வருவதில்லை. அந்த வகையில் அவரது நண்பர்கள் குறித்த, முக்கியமான கருத்துக்களை விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய்க்கு சஞ்சீவ், மனோஜ், ஸ்ரீநாத் மற்றும் ராம்குமார் ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்களாக தற்போதும் இருந்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர்களோடு சேர்த்து விஜய் 5வது ஆளாக எப்போதும் பஞ்சபாண்டவர்கள் போல் ஒன்றாக இருப்பார்கள். அதுவும் ஸ்ரீநாத் என்பவர், விஜய்க்கு மிகவும் நெருக்கம். ஏனென்றால் அவர் காமெடியாக பேசி எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவார்.
லயோலா காலேஜுக்கு அருகில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்தில் தான் இவர்கள் அனைவரும், அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். இவர்களை வீட்டிற்கு அழைக்க விரும்பினால், விஜய் என்னிடம் வந்து அம்மா இதையெல்லாம் சமைச்சு வைங்க என சொல்லிவிடுவார். நான் சமைப்பதை எல்லோரும் ஆசையுடன் சாப்பிடுவார்கள் என ஷோபா தன் மகனின் நண்பர்கள் குறித்து உருக்கத்துடன் பேசியுள்ளார்.