‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் அண்ணன் தம்பிகள் செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!!

0

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் கதையின் நாயகர்களாக நான்கு பேர் நடித்து வருகின்றனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் நடிகர்கள் சேர்ந்து அடித்துள்ள ரகளைகள் புகைப்படங்களாக வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

வழக்கமான சீரியல்களில் எல்லாம் நாயகன் நாயகியை காதலிக்க, அந்த விஷயம் நாயகியின் வீட்டுக்கு தெரியவர, அவர்கள் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள, நாயகியை மாமியார் கொடுமைப்படுத்த, நாயகி பொறுமையாக இருக்க இப்படிதான் தமிழ் சீரியல் பல ஓடிக்கொண்டிருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வழக்கம் போல அழுகையும், கண்ணீருமாக இல்லாமல் ஒரு குடும்ப கதையை மையமாகக்கொண்டு பயணிக்கிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர். இந்த வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையுடன், அண்ணன் தம்பி உறவுகளுடன் அண்ணிகளும் சேர்ந்து கூட்டுகுடும்பமாக வாழும் கதையைப்பார்க்க ரசிகர்களுக்கு ஏகப்பட்ட உற்சாகம்.

இரண்டாவது படத்தில் கமிட்டான பிக் பாஸ் முகின் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

சினிமா பாணியில் எடுக்கப்பட்ட கதை என ஆரம்பத்தில் விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் பிற்பாடு ரசிகர்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த தொடரைக் காணும் போது, அதில் உள்ள காட்சிகள் நம் வீட்டில் நடப்பது போலவே தோன்றுவது மெய்தான். இதனாலேயே இந்த தொடருக்கு ரசிகர்கள் அதிகம்.

தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் ‘பாக்கியலட்சுமி’ தொடர் இணைந்து மகாசங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் ஆரம்பகட்ட படப்பிடிப்பின் போது பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகளான கதிர், ஜீவா, கண்ணன் ஆகிய மூவரும் சீரியல் காஸ்டியூமில் ஒரு கடையில் நின்று இளநீர் குடித்துள்ளனர். இந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here