தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி – துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை!!

0

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக தமிழகத்திற்கு கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24ம் தேதி உடன் முடிவுக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்காக தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக மும்மரமாக செய்து வருகின்றனர். மேலும் பிரச்சார பணி கூட்டணி பற்றிய முடிவுகள் என செம பிசியாக இருந்து வருகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்களை போலவே தேர்தல் ஆணையர்களும் தேர்தல் பணிகளை மிக விரைவாக செய்து வருகின்றனர், மேலும் தேர்தல் ஆணையர்கள் ஏற்கனவே வாக்காளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு தான் டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வந்து இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து சென்றனர்.

இரண்டாவது படத்தில் கமிட்டான பிக் பாஸ் முகின் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விரைவில் தேர்தலுக்கான அதிகாரபூர்வமான தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடக்க போகும் தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 45 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர். இவர்கள் வரும் 25ம் தேதி தமிழகத்திற்கு வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here