தற்போது இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் தமிழக வீரர் ஷாருக்கான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்த தகவலினால் தமிழக கிரிக்கெட் வீரர்கள் படு குஷி அடைந்துள்ளனர்.
ஷாருக் கான்:
நேற்று சென்னையில் வைத்து 14 வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களின் விருப்பமான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்தனர். இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் தமிழக வீரர் ஷாருக்கான் இடம் பெற்றுள்ளார். சமீப காலமாக பஞ்சாப் அணி பல தமிழர்களை வளர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பஞ்சாப் அணி ஷாருக் கானை 5.25 கோடிக்கு எடுத்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் அனைவரும் ஆச்சர்யத்தில் வாய் அடைத்து போயுள்ளனர். இவரது அடிப்படை தொகையாக ரூ.20 லட்சம் தான் நிர்ணயித்தனர். ஆனால் இதனை போட்டி போட்டு டெல்லி, பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் விலையை அதிகரித்தனர். கடுமையான போட்டிக்கு பின்பு பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவரின் விலை உயர்வுக்கு காரணம் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தான்.
கொண்டாடும் வீரர்கள்:
இந்த கோப்பையின் இறுதி போட்டியில் ஷாருக் கான் வரும் 7 பந்துகளில் 18 ரன்களை குவித்து அசத்தினார். அதில் 2 பௌண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். மேலும் அந்த தொடரில் இவர் 220.0 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இதனாலே இவர் ஐபிஎல் தொடரில் தேர்வாவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதேபோல் தான் நடந்துள்ளது.
அபாரதத்திற்கு பதில் முத்தம் – போலீஸ் ஆபிசர் அதிரடி சஸ்பெண்ட்!!
விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணி இந்தூர் செல்கிறது. பேருந்தில் பயணத்தின் போது வீரர்கள் இந்த ஏலத்தை தனது போனில் பார்த்து வந்தனர். ஷாருக் கான் அதிக விலையில் ஏலத்தில் போனதும் வீரர்கள் படு குஷி அடைந்து கொண்டாடினர். தற்போது அந்த வீடியோவை இணையத்தில் தினேஷ் கார்த்திக் வெளியிட்டார். அது வைரலாகி வருகிறது.