ஐஸ்வர்யாவுடன் கண்ணன் நெருக்கமாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விடும் தனம் – விறுவிறுப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனியாக நின்று பேசுவதை தனம் பார்த்து விடுகிறார். இதனால் தனம் மிகவும் கோபம் அடைந்து விடுகிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை மற்றும் கதிர் இருவரும் கடையில் வாடிக்கையாளர்கள் அதிகரித்து விட்டதை அடுத்து மிகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். பின், கதிரை முல்லை படிக்க சொல்கிறார். இதனால் கதிருக்கு கடுப்பாகிறது.

ஹேமா, லக்ஷ்மியை ஒன்றாக வீட்டிற்கு அழைத்து வரும் பாரதி – அதிர்ச்சியில் கண்ணம்மா!!

இதனை அடுத்து அவர் தனக்கு வேலை இருக்கிறது என்றும் தான் வெளியே போக வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் முல்லைக்கு கோபம் வந்து விடுகிறது. அவரை போக விடாமல் தடுக்கிறது. பின், கதிர் கெஞ்சி சென்று விடுகிறார்.

பின், கடையில் மூர்த்தி, ஜீவா மற்றும் கதிர் கடையில் கூப்பன் விற்று இருப்பதை குறித்து பேசி கொள்கின்றனர். அதிகளவில் கூப்பன் விற்றதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். பின், வீட்டிற்கு கஸ்தூரி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வருகின்றனர்.

பேசிக்கொண்டு இருக்கும் போது கஸ்தூரி சிறிது நேரத்தில் கிளம்பலாம் என்று கூறுகிறார். ஐஸ்வர்யா தான் இங்கேயே இருந்து விட்டு சிறிது நேரம் கழித்து வருவதாக கூறுகிறார். ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் பேசி சிரிப்பதை பார்த்து தனத்திற்கு சந்தேகம் வருகிறது.

பின், கடையில் மீனா தீயாய் வேலை செய்கிறார். இதனை பார்த்து ஜீவா, மூர்த்தி மற்றும் கதிர் மூவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பின், வீட்டில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனியாக சென்று பேசுகின்றனர். அப்போது என்று பார்த்து தனம் பார்த்து விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கண்ணன் ஐஸ்வர்யாவின் தோள் மேல் கை வைத்திருப்பது தனத்திற்கு மேலும் கோபத்தினை ஏற்படுத்துகிறது. இதனால் கத்தி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here