விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று வெண்பாவின் மருத்துவமனை முடி இருப்பதை பார்த்து சந்தேகம் அடைகிறார். பின், ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஒன்றாக பாரதி காரில் வருவதை கண்ணம்மா பார்த்து விடுகிறார்.
“பாரதி கண்ணம்மா” சீரியல்
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் சௌந்தர்யா பாரதி கண்ணம்மாவிடம் பேசியதனை நினைத்து மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார். பின், அகில் மற்றும் அஞ்சலி இருவரும் வந்து சமாதானம் செய்கின்றனர். அதே போல் அவர்கள் இருவரும் வெண்பாவிற்கு பாரதி மேல் இருக்கும் காதலை எடுத்து உரைக்கின்றனர். அதே போல் பாரதி நம் அனைவரையும் மிரட்ட வெண்பாவை பயன்படுத்தி கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!
இதனால் சௌந்தர்யாவிற்கு குற்ற உணர்வாக இருக்கின்றது. இதனை அடுத்து தான் வெண்பாவிடம் நேரடியாக சென்று பேச இருப்பதாக சொல்லி கிளம்புகிறார். அங்கு வெண்பா வீட்டில் வெண்பா காணாமல் போய் பல மணி நேரம் ஆகி விட்டதால் பாரதியிடம் கேட்கலாமா என்று யோசிக்கிறார்.
பின் விட்டு விடுகிறார். பின், சௌந்தர்யா வெண்பாவின் மருத்துவமனைக்கு சென்று பார்க்கிறார். அங்கு மருத்துவமனை 30 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், அதே போல் பாரதியும் வந்து பார்த்து விட்டு சந்தேகம் அடைகிறார்.
போன் அடித்து பார்த்தாலும் அவர் எடுக்காததால் சந்தேகம் வலுக்கிறது. பின், ஸ்கூலில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் பேசி கொண்டு இருக்கின்றனர். கண்ணம்மா வருவதற்கு அதிக நேரம் ஆனதால், பாரதி லட்சுமியை தனது காரில் ஏற்றி கொள்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அப்போது லட்சுமி டாப் விண்டோவை பார்த்து கொண்டு இருக்கிறார். இதனை பார்க்கும் பாரதி அவருக்காக அதனை திறந்து விடுகிறார். பின், மூவரும் மகிழ்ச்சியாக காரில் செல்கின்றனர். அதனை கண்ணம்மா பார்த்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.