இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் திடுக்கிடும் வகையில் மத்திய அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கே 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று மூன்றாவது நாளாக கொரோனா தொற்று 3 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 3,46,786 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,19,838 ஆக உயர்ந்துள்ளது.
இது ஆறுதலளிக்கும் விஷயமாக இருந்தாலும், பலி எண்ணிக்கை ஒரே நாளில் 2,264 ஆக உள்ளது. இப்படி இந்த கொரோனாவில் இருந்து விடுபடுவது எப்படி என்று நாட்டு மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இந்த கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளது. இதனை கேட்ட பலரும் அச்சத்தில் உள்ளனர். வரும் வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கலர்ஸ் டிவியில் பிக் பாஸ் பிரபலம் – யார் தெரியுமா?? அவரே வெளியிட்ட புகைப்படம்!!
மேலும் இதனை மக்கள் பயப்படுவதற்காக சொல்லவில்லை, ஆனால் இதுதான் உண்மை என்றும் கூறியுள்ளனர். இதே விஷயத்தை தான் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். முழு ஊரடங்கு போட்டு விடுவார்களோ என்ற பயமும் அனைவர்க்கும் அதிகரித்து வருகிறது.