விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகை லாஸ்லியா தற்போது பல நாட்களுக்கு பிறகு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
“பிக் பாஸ்” லாஸ்லியா
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான், பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஹிந்தியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழிலும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றவர் தான் லாஸ்லியா.
இலங்கை நாட்டினை சேர்ந்த இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. இவர் அனைவரிடமும் மிகவும் சகஜமாக பேசி பழகி வந்தார். இவருக்கும் அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் சேரனிற்கும் ஒரு தந்தை – மகள் பாசம் இருந்து வந்தது.
இப்படியாக இருந்த போது கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் மிகவும் நட்புடன் பழகி வந்தனர். இதனால் லாஸ்லியாவின் அப்பா மிகவும் கோபம் அடைந்து அவரை நன்றாக திட்டி விட்டார். இதனை அடுத்து லாஸ்லியா தனது போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது லாஸ்லியா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல நாட்களுக்கு பிறகு இவர் தற்போது ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார். மிகவும் ரம்மியமான ஒரு சூழலில் அந்த போட்டோஷூட்டினை நடத்தி உள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.