கண்ணன் காரைக்குடியில் இருக்கும் விஷயத்தை கண்டுபிடிக்கும் பிரஷாந்த் – பரிதவிப்பில் ஐஸ்வர்யா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரஷாந்துக்கு கண்ணனின் நண்பன் மூலம் கண்ணன் ஐஸ்வர்யா காரைக்குடிக்கு செல்லும் விஷயம் தெரிய வருகிறது. மேலும் கஸ்தூரி வீட்டில் கத்திகொண்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் துணி வாங்க கடைக்கு செல்ல காரை விட்டி இறங்குகிறார். அப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தேர்ந்த ஆள் பார்க்க கண்ணன் தன் நண்பன் வீட்டிற்கு வந்ததாக சொல்கிறார். அங்கிருந்து எப்படியோ சமாளித்து விட்டு செல்கிறார்.

அடுத்ததாக கண்ணனின் நண்பன் ஓரிடத்தில் இருக்க பிரஷாந்த் அவரிடம் விசாரிக்கிறார். அப்பொழுது தன்னை விட்டு அவர்கள் மட்டும் வெளியே சென்றதை சொல்ல பிரஷாந்த் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை அதனால் கண்ணனை அழைத்து வர சொன்னார்கள் என்று பொய் சொல்கிறார்.

அவரது நண்பரும் கண்ணன் சென்ற கார் டிராவல்ஸ் பற்றி சொல்ல அங்கு சென்று விசாரிக்கிறார். காரைக்குடி சென்ற விஷயம் தெரிய பிரஷாந்த் கிளம்புகிறார். வீட்டில் கஸ்தூரி கத்தி கொண்டுள்ளார். அப்பொழுது மூர்த்தி அங்கு வர கண்ணனை அழைத்து வரும் படி ஜீவா கதிரிடம் சொல்கிறார்.

ஜீவா கதிர் ரோடு ரோடாக சுற்றி திரிகின்றனர். கண்ணன் ஐஸ்வர்யா கோவிலுக்கு வர பட்டுவேஷ்டி, சேலை கட்டி தயாராகின்றனர். மேலும் கண்ணன் தனது போனை எடுக்க வெளியே வர அங்கு பிரஷாந்த் வருவதை பார்த்து ஷாக்காகிறார். மேலும் பிரஷாந்த்துக்கு எப்படி தெரியும் என்று குழப்பமடைகின்றனர்.

ஐஸ்வர்யா கிளம்பி இருக்க கண்ணன் எக்காரணத்தை கொண்டும் உன்னை கைவிட மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்ததாக மாலை, தாலி வாங்க அனைவரும் மறந்து விடுகின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here