இன்று (04 ஆகஸ்ட் 2021) நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக இப்போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்த மாதம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதில் இன்று காலை நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனக்கு கொடுக்கப்பட்ட முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் ஈட்டி எறிந்துள்ளார். இதன் மூலம் நீரஜ் சோப்ரா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொள்வார். அதே சமயம் இன்று பிற்பகல் நடைபெறும் ஹாக்கி போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அர்ஜெண்டினாவை எத்ரிகொள்கிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்