சித்ராவின் இறப்பை பற்றி தவறாக வதந்தியை பரப்பும் நெட்டிசன்கள் – கொதித்தெழுந்த ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மனதில் குடியேறியவர் தான் சித்ரா. இவர் கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரை பற்றி கடந்த சில வாரமாக சில இவரது இறப்பை அசிங்க படுத்தும் வகையில் பல வீடியோக்கள் வெளியான வண்ணம் இருந்து வருகிறது.

சித்ரா:

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங் ஸ்டாராக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடத்தி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் வி ஜே சித்ரா. ஓர் வெள்ளித்திரை பிரபலத்திற்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளார்களோ அந்த அளவுக்கு இவருக்கும் ரசிகர்கள் உண்டு. மேலும் இவர் சின்னத்திரையில் நுழைவதற்கு பல இன்னல்களை சந்தித்துள்ளார்.

இவரது தன்னம்பிக்கையை பார்த்தே  இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் சேர்ந்தனர். இந்நிலையில் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் இவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு சின்னத்திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது வரை இந்த சோகத்தில் இருந்து ஒருவரும் மீளவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இவரது மறைவை சிலர் வியாபாரம் செய்து வருகின்றனர். மறைவு குறித்து தவறான கருத்துக்கள் கூறுவது, அசிங்கமாக கூறுவது, சித்ரா ஆவியிடம் பேசுவது என சிலர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான சித்ரா ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here