பாகிஸ்தானை சேர்ந்த படகு ஒன்று இந்தியாவில் உள்ள தூத்துக்குடி கடலோர பகுதிகளில் சென்றது. அதனை பார்த்த இந்திய கடலோர காவல் துறையினர், அவர்களிடம் சென்று விசாரணை நடத்தி ஹெராயின் & 10 கை துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
பாகிஸ்தான் கயவர்கள்:
கடந்த 1947ஆம் ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டு வரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே பகை இருந்து வருகிறது. இதனால் பல ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தார்கள். மேலும் பல பேர் குடும்பத்தை இழந்து தவிக்கிறார்கள். ஆனாலும் இந்த போர் ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று இலங்கை எல்லை அருகே தூத்துக்குடி கடலோர பகுதிகளை பாகிஸ்தானின் படகு தெரிந்தது. இதனை பார்த்து கடலோர காவல் துறையினர் விரைந்து சென்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர் காவல் துறையினர். அப்பொழுது பல கிலோ கிராம் ஹெராயின் & 10 கை துப்பாக்கிகளை அவர்களிடம் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் போதைமருந்து கடத்தல் கும்பல் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வந்தவர்கள் என்பதை கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.