பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல சண்டைகள் ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் நிஷாவிற்கு இருந்து வந்த ஆதரவுகள் அனைத்தும் குறைந்துள்ளது என்றே சொல்லலாம். இப்பொழுது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழனி நிஷாவை பற்றி கூறியுள்ளார்.
பழனி – நிஷா:
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல டாஸ்குகளை கொடுத்து போட்டியாளர்களுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் அங்கு அர்ச்சனா குரூப்பிஸம் நடத்தி வருவதாகவும் பேசி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெளியிட்ட ப்ரோமோவில் சனம் மற்றும் ரியோ இடையே பல பிரச்சனைகளும் ஏற்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் நிஷாவுக்கு ஆரம்பகாலத்தில் இருந்து வந்த ஆதரவுகள் அனைத்தும் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் ரியோ, அர்ச்சனாவுக்கு மட்டுமே ஆதரவாக பேசி வருகிறார். இந்நிலையில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நிஷாவுடன் கலந்துகொண்ட பழனி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் நிஷா பற்றிய பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது அங்கு இருப்பது உண்மையான நிஷா கிடையாது என்று ஆணித்தனமாக கூறுகிறார். நிஷா என்ன தான் ஜாலியாக இருந்தாலும் அவளை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. அவளை யாராவது பேசினால் அசிங்கப்படுத்தும் அளவிற்கு பேசி விடுவாள். குழாயடி சண்டையில் கூட அவளிடம் யாரும் ஜெயிக்க முடியாது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாலா எப்பிடியோ அதே மாதிரி தான் நிஷா.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
பஸ்ஸில் ஒருவர் எதோ பேசிவிட்டார் என்று அவரை வெளுத்து வாங்கிவிட்டாள். இப்பொழுது அவர் பிக் பாஸ் வீட்டில் நடிக்க தான் செய்கிறாள் என்று கூறியுள்ளார் பழனி. மேலும் இதற்கு பலரும் நிஷாவுக்கு எதிராக கமன்ட் செய்து வருகின்றனர். சிலர் நிஷா மேடையில் பேச தான் லாயக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லை என்றும் கூறி வருகின்றனர். இந்த வாரத்தில் நிஷா தான் வெளியேறப் போவதாகவும் கூறுகின்றனர்.