இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறித்து ப சிதம்பரம் அவர்கள் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அழு, எனதருமை நாடே..!
இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது தொடர்பாக ப சிதம்பரம் அவர்கள் இந்த ஊரடங்கு நாட்களில் உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். பணம் இருக்கிறது; உணவு இருக்கிறது; ஆனால் அரசு இரண்டையுமே வழங்குவதில்லை. அழு, எனதருமை நாடே! என பதிவிட்டு உள்ளார்.
மேலும் நிதியுதவி தொடர்பான முதல்வரின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. கடந்த 25-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் ஒரு ரூபாய் கூட சேர்க்கப்படவில்லை. பிரதமரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்தி நாமும் எதிரொலிக்கலாம். ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த முடிவை நாம் ஆதரிக்கிறோம் எனவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |