கடந்த 2009ம் ஆண்டு நடத்த மக்களவை தேர்தலில் பா.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது வெற்றியில் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். தற்போது அதற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பா.சிதம்பரம்:
கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடந்தது. அதில் பா.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். இவர்களில் யார் வெற்றி பெறுவார் என்பது பற்றி தெரிவதற்கு அனைவரும் மிக ஆவலாக இருந்து வந்தனர். தேர்தல் வாக்களிப்பு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பா.சிதம்பரம் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட 3,354 வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்று அசத்தினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் இவரது வெற்றியை ஏற்க மறுத்த ராஜகண்ணப்பன், இதில் எதோ சதி உள்ளது என்று கூறி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்தது.
அவ்வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது, பா.சிதம்பரத்தின் மீது வைக்கப்பட்ட குற்றத்திற்கு ஆதாரம் ஒன்றும் சரியான நிலையில் இல்லாத காரணத்தினால் சிதம்பரத்தின் வெற்றி செல்லும் என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி கூறினார்.