8 ஆண்டுகளுக்கு பிறகு பாரதி வீட்டிற்குள் நுழையும் கண்ணம்மா – எதிர்பாரா திருப்பங்களுடன் “பாரதி கண்ணம்மா” சீரியல்!!

0

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா ஹேமா கூறும் அட்ரஸ் கண்டுபிடித்து வீட்டிற்கு செல்கிறார். அது பாரதியின் வீடு என்று அறிந்து கண்ணம்மா அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் நுழைய மறுக்கிறார். ஆனால், ஹேமா கண்ணம்மாவை விடாப்பிடியாக வீட்டிற்குள் அழைத்து சென்று விடுகிறார்.

பாரதி கண்ணம்மா

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா ஹேமாவின் வீட்டிற்கு செல்கிறார். பெரிய வீட்டில் வேலை செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து கொண்டு கண்ணம்மா அவர்களது வீட்டிற்கு செல்கிறார். இதனை அடுத்து கண்ணம்மாவிற்காக ஹேமா பாயசம் செய்ய சொல்கிறார். இதனால் கோபம் அடையும் சௌந்தர்யா அவர் வீட்டிற்கு வேலை பார்க்க தான் வருகிறார் என்றும் அவருக்கு என்று தனியாக சமைக்க தேவையில்லை என்று கூறுகிறார்.

சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் உயர்வு – பங்குச்சந்தையில் புதிய உச்சம்!!

இதனால் ஹேமா முகம் வாடிவிடுகிறது. இதனை பொறுக்க முடியாத வேணு குழந்தைக்கு வேலைக்காரி மற்றும் விருந்தினர் என்று பேதத்தினை சொல்லி கொடுக்காதே என்று திட்டி விடுகிறார். இப்படியாக இருக்க கண்ணம்மா ஹேமா கூறிய வீடு பாரதியின் வீடு என்பதனை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அவருக்கு பல நினைவுகளும் வந்து விடுகிறது. வீட்டிற்கு திரும்பி சென்று விடலாம் என்று கண்ணம்மா கூறும் போதே ஹேமா வந்து விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கண்ணம்மாவால் அந்த நேரத்தில் எந்த முடிவினையும் எடுக்க முடியவில்லை. ஹேமா கண்ணம்மாவை விடாப்பிடியாக வீட்டிற்குள் அழைத்து சென்று விடுகிறார். கண்ணம்மாவை வீட்டின் ஹாலில் நிறுத்தி வைத்து விட்டு ஹேமா அனைவரையும் அழைத்து செல்ல சென்று விடுகிறார். கண்ணம்மாவிற்கு தான் அந்த வீட்டினை விட்டு போன ஞாபகங்கள் வந்து விடுகிறது. அந்த நேரத்தில் சௌந்தர்யா உள்ளே வந்து கண்ணம்மாவை பார்த்து விடுகிறார். அவருக்கு இது அளப்பரிய மகிழ்ச்சியினை வழங்கி விடுகிறது.இதற்குள் ஹேமா வந்து சௌந்தர்யாவிடம் கண்ணம்மாவை முன்பே தெரியுமா என்று கேட்கிறார். இல்லை என்று கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா இருவரும் ஒருசேர மறுத்து விடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here