சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் உயர்வு – பங்குச்சந்தையில் புதிய உச்சம்!!

0
Sensex
Sensex

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குச்சந்தையில், சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பங்குசந்தையில் ஏற்ற, இறக்கத்தில் இருந்த பங்குகள் இன்று உயர்ந்துள்ளது.

சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு:

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட பங்குசந்தை நிலவரம் மீண்டுமாக உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். அதேபோல இந்த வாரத்தின் இரண்டாம் நாளான இன்று பங்குச்சந்தை மீண்டுமாக உயரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள்கிழமை, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் புள்ளிகள் 610 உயர்ந்து 52,000 என்ற புதிய உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் மேலும் சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சனம் ஷெட்டி வெளியிட்ட காதலர் தின புகைப்படம் – யார் அந்த காதலர்? நெட்டிசன்கள் ஆர்வம்!!

மீண்டுமாக இன்று காலை துவங்கிய பங்குச்சந்தை நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் புள்ளிகள் 308 உயர்ந்து 52,462ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்ஃடி புள்ளிகள் 90 உயர்ந்து 15,405ஐ தொட்டுள்ளது. திங்கள்கிழமை பங்குச்சந்தையில் சந்தை குறிப்புகளும், உள்ளூர் பொருளாதார தளர்வுகளும் நேர்மறையாக இருந்தது. தற்போது வங்கி மற்றும் நிதிநிறுவனத்தின் பங்குகளுக்கு வரவேற்புகள் அதிகமாக இருந்ததால் சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் உயர்ந்திருப்பதாக பங்கு வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here