தமிழகத்தில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கட்சி வெற்றி கண்டது. திமுக கட்சிக்கு எதிர்க்கட்சியாக அதிமுக கட்சி இடம்பெற்றது இப்பொழுது எதிர்கட்சித் தலைவர் யார் என தேர்ந்தெடுப்பதில் அதிமுக கட்சியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படா விட்டால் திமுகவுக்கு மாறப் போவதாக செய்தி கசிந்துள்ளது.
அதிமுகக்குள் ஏற்படும் சண்டை மோதல்…
அதிமுக கட்சி ஆளும் கட்சியாக இருந்த பொழுது 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவருக்கு பிறகு யார் அந்தக் கட்சியின் தலைவர் ?யார் முதலமைச்சர் ? என்ற குழப்பமும் கட்சி சண்டையும் மோதலும் ஏற்பட்டது. ஆனால் ஜெயலலிதா அம்மா திரு. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் அவர் இருக்கும் பொழுது பொறுப்பை வழங்கினார்.
.பின் இரு அணியினரும் பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராகவும் ஓ. பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர்.
ஓ.பன்னிர்செல்வம் திமுகாவில் இணைய போகிறாரா?
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு எதிர் கட்சியாக அதிமுக அமர்ந்துள்ளது இப்பொழுது அதிமுக தலைவர் யார்? எதிர்க்கட்சியின் தலைவர் யார்? என்ற சலசலப்பு கட்சிக்குள் மீண்டும் ஏற்பட்டது கட்சியின் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது அதில் கட்சி ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியின் துணை ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் பதவி வகித்தனர் ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே அதிக ஆதரவாளர்களை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இதனால் மனமுடைந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை விட்டு தன் ஆதரவாளர்களுடன் வெளியேறி திமுக கட்சியில் இணையபோவதாக சில செய்திகள் வெளியாகி உள்ளது இது வதந்தியா அல்லது உண்மையா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.