18-44 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம் !!!

0

18-44 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம் !!!

பஞ்சாப்: லூதியானாவில் 18-44 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

“லூதியானாவில் 25,000க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர்” என்று பஞ்சாப் இளைஞர் மேம்பாட்டு வாரியத்தின் (PYDB) தலைவர் சுக்விந்தர் சிங் பிந்த்ரா கூறினார்.

வி.கே.ஜான்ஜுவா, முதன்மை செயலாளர், தொழிலாளர் துறை, பஞ்சாப் அவர்கள் கூறியதாவது, தற்போது மாநிலத்தில் 2.94 லட்சம் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர்.

அவர்களில் 2.19 லட்சம் 18-44 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், முதல் சுற்றில், 18-44 வயதுடைய 2,19,630 பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும், பின்னர், 5.19 லட்சம் எண்ணிக்கையில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here