மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்க அனுமதி கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் வாதங்களை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மருத்தவ மேற்படிப்புகளில் சேர்க்கை:
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களது மேற்படிப்பினை தொடர 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அரசாணை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், இதனை எதிர்த்து தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு வழங்கியிருந்த உத்தரவுக்கு அனுமதி அளித்திருந்தது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த இட ஒதுக்கீடு குறித்து மனுதாரர்கள் சார்பில் கூறப்பட்டதாவது, “இந்த நடைமுறை கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் உள்ளது. இது அரசின் தனிப்பட்ட முடிவு. இந்த இட ஒதுக்கீடு நடைமுறை தொடர்ந்து முறைப்படுத்தப்பட்டு வருகின்றது”
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
“இதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் மாற்றம் கொண்டு வர மாநில அரசிற்கு அதிகாரம் உண்டு. இந்த இட ஒதுக்கீடு குறித்து வழங்கப்படும் மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” இவ்வாறாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது.
நீதிமன்ற தீர்ப்பு:
அதனால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மீண்டும் தனியார் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதியான நாகேஸ்வர ராவ் தலைமை கொண்ட அமர்வு விசாரித்தது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டிருப்பதாவது, “தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி உட்பட 50 சதவீத இட ஒதுக்கீட்டினை அரசு மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு கிடையாது” இவ்வாறாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசு வழிமொழிந்திருந்த வாதங்களின் அடிப்படையில் இவ்வாறாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த ஆண்டு 25 கல்லூரிகளில் 584 இடங்கள் இல்லாமல் போய் உள்ளது. இந்த தீர்ப்பிற்கு தற்போது மருத்துவ சங்கம் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.