வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நிவர் புயலாக மாறி உள்ள நிலையில், இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் சூழ்நிலைக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நிவர் புயல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த பேரிடியாக நிவர் புயல் தாக்க உள்ளது. இதனால் அதிகம் பாதிப்படைய உள்ளதாக கண்டறியப்பட்ட 7 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ள நிலையில், இன்று நண்பகல் நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. நிவர் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று அறிவித்த நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சூழ்நிலைக்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தலின் பேரில் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து முடிவெடுத்துக் கொள்ளுமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.