கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி மருந்தை ஒவ்வொரு நாடும் கண்டுபிடித்து வந்தது. தற்போது ரஷ்யா நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்தான ஸ்புட்னிக் வி என்ற மருந்தை கண்டுபிடித்தது உள்ளது. அந்த மருந்து சோதனையில் 95% வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா தகவலை தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது தவிர குறைந்தபாடு இல்லை. இந்த கொரோனாவுக்கு உலகம் முழுவதும் சுமார் 59.2 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
1.4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 39.7 மில்லியன் பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
“ஸ்புட்னிக் வி”
உலகம் முழுவதும் கொரோனவை அளிப்பதற்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக ஒவ்வொரு நாடும் பகலும் இரவும் உழைத்து வந்தது. பின் ரஷ்யா நாடு “ஸ்புட்னிக் வி”என்ற மருந்தை கண்டுபிடித்தது ரஷ்யா.
அதில் முதல் 2 கட்ட சோதனையில் 90 %வெற்றி அடைந்தது. ரஷ்யா மற்றும் இல்லாமல் அமெரிக்கா,மாடர்னா மற்றும் பிரிட்டன் அக்ஸ்போர்ட் போன்ற நிறுவனமும் தற்போது 95 % வெற்றி பெற்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இன்று நடத்திய 3 ஆம் கட்ட சோதனையில் “ஸ்புட்னிக் வி” என்ற கொரோனா தடுப்பூசி வெற்றி அடைந்துள்ளது.