கொரோனா பரவலுக்கு பின் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். அதே போல் 2022 ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.6 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு:
டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல விவகாரங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “இந்திய பொருளாதாரம் கொரோனா பரவலுக்கு பின் தற்போது மீண்டு வருகின்றது. பொருளாதாரத்தை மேன்படுத்த வலிமையான சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளபட்டு வருகின்றது. நோய் பரவல் தற்போது குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் இந்திய பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை மேம்பட்டு வருகின்றது”
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
“வரும் 2022 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.6 சதவீதம் உயரும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மத்திய அரசு அறிவித்துள்ள “ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு” திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து இருக்கின்றது. நாட்டில் உள்ள 28 மாநிலங்களிலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதால் இந்தியா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது”
பொருளாதாரம் மீண்டு வரும்:
“ரயில்வே துறை சார்பில் கையாளப்படும் சரக்கின் அளவு 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக அவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாட்டில் உள்ள சிறுதொழிலாளர்களுக்கு ஆத்மனிபர் சார்பில் 3.78 லட்சம் பேருக்கு மொத்தம் ரூ.1373.33 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது”
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
“அவசரகால கடன் திட்டம் மூலமாக நாட்டில் உள்ளவர்களுக்கு 2.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து விதமான அறிவிப்புகள் மத்திய அரசு சார்பில் வழங்க உள்ளேன். நாட்டின் பொருளாதாரம் 3வது காலாண்டில் வலுவாக மீண்டு வரும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.