தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் மாற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
புரோக்கர்கள் ஆதிக்கம்..!
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2a மற்றும் குரூப் 1 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததால் தேர்வர்களுக்கு ஆணையத்தின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டது. இதனை தடுப்பதற்காகவும், தேர்வுகளில் புரோக்கர்கள் ஆதிக்கத்தை தடுப்பதற்கும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் பல தேர்வுகள் சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டன.
வினாத்தாள் கசியாமல் இருக்க..!
டிஎன்பிஎஸ்சி நடத்தும் வருங்கால தேர்வுகளில் வினாத்தாள் கசியாமல் இருப்பதற்காக ஒவ்வொரு போட்டி தேர்விலும், வரிசை எண் மாற்றப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகை வினாத்தாள்களை மாற்றி, மாற்றி வழங்குவது. மேலும், வினாத்தாள் தயாரிப்பில் உள்ள ஆசிரியர்கள் பட்டியலை மாற்றி, புதிய ஆசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களிடம், வினாத்தாள் தயாரிப்பு பணிகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
அதுமட்டுமில்லாமல் தேர்வு மையத்துக்கு வாகனங்களில் வினாத்தாளை அனுப்புவதற்கு பதில், இணையதளம் வழியே வினாத்தாளை வழங்குவது, அவற்றை பெறுவதற்கு, ஆன்லைனில் ரகசிய குறியீட்டு எண் நிர்ணயிப்பது என்ற புதிய முறையையும் கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |