தஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையை குரங்கு தூக்கி சென்று அகழியில் வீசியதால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சோக சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பச்சிளம் குழந்தை:
தஞ்சை அருகிலுள்ள மேல் அரங்கத்தை சேர்நதவர் ராஜா. அவருக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு பெண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த பகுதியில் சுற்றி திரிந்த குரங்குகளில் ஒன்று அந்த குழந்தையையும் மற்றொரு பெண்குழந்தையும் தூக்கி சென்றுள்ளது. அதில் ராஜாவின் குழந்தையை மட்டும் அங்குள்ள அகழியில் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் அகழி நீரில் மூழ்கி மூச்சு திணறி அந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக அக்குழந்தையின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!
அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தைகளை கவனித்து கொள்ளுவதில் அதிக விழிப்புணர்வுடன் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை இந்த துயர சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.