இந்தியாவில் உள்ள 23 சட்டபல்கலையில் சேர்வதற்காக நடத்தபடும் பொது தேர்வினை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்கவும் முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
கல்வி ஆண்டிற்கான சேர்க்கை:
நாடு முழுவதும் 23 சட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த பல்கலைக்கழகங்களில் சேர தேசிய அளவில் சட்ட பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சற்று தாமதமாக தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
அதனை விசாரித்த நீதிபதிகள் தேர்வுகளை மாணவர்கள் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் எழுத வேண்டும் என்றும் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் நடைபெறும் என்றும் உத்தரவிட்டது. தேர்வுகள் அறிவித்தது போல் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் இந்த தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒரு மனு கொடுக்கப்பட்டது.
நீதிபதிகள் தீர்ப்பு:
மனுதாரர் சார்பில் கூறப்பட்டதாவது “ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த தேர்வில் நிறைய குழப்பங்கள் இருந்தது. பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்பட்டன. மாணவர்கள் அளித்த பதில்களை மென்பொருள் சரியாக கணிக்கவில்லை. இந்த தேர்வுகள் குறித்து 40 ஆயிரம் ஆட்சபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் 19 ஆயிரம் ஆட்சபனைகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இப்படி பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் இந்த தேர்வினை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை – இன்றைய முக்கியச் செய்திகளின் சுருக்கம்!!
வழக்கினையும் மனுதாரரின் கோரிக்கையினையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர்கள் தெரிவித்ததாவது “நுழைவு தேர்வினை ரத்து செய்ய முடியாது. கவுன்சிலிங்கிற்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களுக்கு ஏதேனும் ஆட்சபனை இருந்தால் அவர்கள் குறை தீர்ப்பு குழுவிடம் தெரிவிக்கலாம். இது குறித்து உரிய முடிவினை குறைதீர்ப்பு குழு முடிவு எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.