இந்தியாவில் தற்போது கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை என்னும் அரியவகை நோயும் பரவி வருகிறது. தற்போது இதுகுறித்து பிரதமர் அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
கருப்பு பூஞ்சை:
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவத்தினால் தினசரி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் மேலும் ஓர் கொடிய வகை கருப்பு பூஞ்சை என்னும் நோய் வேகமாக பரவி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்த வகை நோய் தமிழகம், மராட்டியம், உபி போன்ற பல மாநிலங்களில் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. தற்போது இதுகுறித்து நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி உத்திரபிரதேச மாநில வாரணாசியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுடன் பிரதமர் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
‘எங்க புல்லிங்கோ எல்லாம் பயங்கரம்’ – குத்தாட்டம் போடும் பிக் பாஸ் பிரபலங்கள்!!
அப்போது அவர் அங்குள்ள மருத்துவ படுக்கை வசதிகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்தும் ஆலோசித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவும் இந்த சூழலில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் கடும் சவாலாக இருக்கிறது என்று தெரிவித்தார். இதனை சமாளிக்க நாம் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.