“திருப்பாச்சி அரிவாளை தீட்டிக்கிட்டு வா டா வா டா” – நெல்லையில் பயங்கரம்!!!

0

நெல்லையில் அரிவாளுடன் 4 பேர் கொண்ட கும்பல் ரகளை செய்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அரிவாளுடன் ரகளை செய்த கும்பல்:

நெல்லையின் மையப்பகுதியான உடையார்பட்டியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதனை கண்டிக்கும் வகையில் நேற்று முன்தினம் ஒரு கும்பலை சேர்ந்த 4 பேர் உடையார்பட்டி பகுதிக்கு அரிவாளுடன் வந்தனர். அவர்கள் உடையார் பட்டி- மேகலிங்கபுரம் சாலையில் நின்று அரிவாளை வைத்து; அங்கு உள்ள பொதுமக்களை மிரட்டினார்கள். அதில் ஒருவர் அரிவாளை எடுத்துக்கொண்டு பைக்கில் போகும் நபரை வெட்ட துரத்தினார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; அங்கு வந்த போலீஸ்படையை கண்டதும் அந்த 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்ப்பட்டது. பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் போலீசார் கும்பல் குறித்து விசாரித்தனர். ஆனால் அவர்களைப் பற்றி யாருக்கும் எதுமே தெரியவில்லை.

இதனால் அங்கு இருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர். அந்த விடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில்; தாழையூத்தை சேர்ந்த மதன்(வயது24) மற்றும் அவனது கூட்டாளிகளான வெள்ளப்பாண்டி(34), சங்கரபாண்டி(35), பாஸ்கர்(23) ஆகியோர் இந்த சம்பவத்தை நடத்தினர் என்பது தெரிந்ததை அடுத்து  பாண்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்; மற்ற 3 பேரையும் தேடிவருகின்றார்கள்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here