சைவ பிரியர்களுக்கு என்றுமே மஸ்ரூம் என்று கூறப்படும் காளான் என்றால் மிகவும் பிடிக்கும் என்று தான் கூற வேண்டும். இன்று காளானை வைத்து செய்யப்படும் டேஸ்டியான “காளான் மசாலா” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!
தேவையான பொருட்கள்
- காளான் – 400 கிராம்
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- இலவங்கப்பட்டை – 2
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- பெருஞ்சீரகம் விதைகள் – 1/2 டீஸ்பூன்
- வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2 (கீறியது)
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
- உப்பு – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- சீரகம் தூள் – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
- சோம்பு – 2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – தேவையான அளவு
செய்முறை
முதலில், காளானை நன்றாக கழுவி விட்டு அதனை நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் ஏலக்காய், கிராம்பு, சோம்பு மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும் அதில் வெங்காயம் சேர்க்க வேண்டும்.
“நான் மாறிட்டேனு எல்லாரும் நம்பிட்டாங்க” – தாட்சாயினிடம் உண்மையை போட்டு உடைக்கும் பவானி!!
வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் அதில் எடுத்து வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி & பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். மசாலா வாசனை போனதும் அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் சிறிது வற்றியதும், அதில் எடுத்து வைத்துள்ள காளானை சேர்க்க வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மசாலா காளானில் படும்வரை கிண்டி விட்டு இந்த கலவையினை மூடி வைத்து விட வேண்டும். 5 நிமிடங்களுக்கு பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை சேர்த்து இறக்கி விட வேண்டும். இதனை சூடான சாதத்துடனோ அல்லது ரொட்டியுடனோ பரிமாறலாம். அவ்ளோ தான்!!