கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சிவாவின் தங்கை ஐஸ்வர்யாவிற்கு என்று சிவா மற்றும் சஹானா இருவரும் சேர்த்து பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவெடுக்கின்றனர்.
‘இதயத்தை திருடாதே’ தொடர்
தனியார் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சிவா மற்றும் சஹானா இருவரும் பொய்யான வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக பவானி கோபம் அடைகிறார். சிவா தனக்கு குறை இருந்ததாக கூறியிருந்தது அவரை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. பின், இது குறித்து சிவா மற்றும் சஹானா இருவரும் பேசி கொள்கின்றனர். இதனை மறைந்து நின்று ஐஸ்வர்யா கேட்டு விடுகிறார்.
வெள்ளை நிற உடையில் மிடுக்காக போஸ் கொடுத்த வனிதா – கிண்டலடிக்கும் ரசிகர்கள்!!
அவரை சமாதானபடுத்தும் சஹானா சிவாவிடம் ஐஸ்வர்யாவிற்கு பிடித்த விஷயங்களை வாங்கி கொடுக்க சொல்கிறார். இதனை அடுத்து சிவா ஐஸ்வர்யாவிற்கு பிடித்த சைக்கிள், ஜிமிக்கி, தங்க கொலுசு, புடவை ஆகியவற்றை வாங்கி கொடுத்து அசத்துகிறார். இதனால் வீட்டில் இருக்கும் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். இப்படியாக இருக்க, சிவாவின் அம்மா பவானி தாட்சாயினிடம் சென்று தான் வீட்டில் அனைவரிடமும் நடிப்பது குறித்து கூறுகிறார்.
பவானியின் நடிப்பினை பார்த்து தாட்சாயினி அசந்து விடுகிறார். பின், ஐஸ்வர்யா சிவா வாங்கி கொடுத்த சைக்கிளில் செல்கிறார். எதிரே சேது வந்து விடுகிறார். அதே போல் ஐஸ்வர்யாவிடம் தாங்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டுகிறார். இதனை பார்த்து பயப்படாமல் ஐஸ்வர்யா பதில் சொல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் சேது கோபத்துடன் சென்று விடுகிறார். பின், கடைசியாக சிவா ஐஸ்வர்யா முன்பு தன்னை கிண்டல் செய்ததை மனதில் வைத்து சிவாவை அடிக்கிறார். பின், இருவரும் ஐஸ்வர்யா திருமணம் குறித்து பேசுகின்றனர். அதே போல் இன்ஸ்பெக்டர் வெற்றி சிவாவின் நண்பனான பரட்டையை மிரட்டி விட்டு செல்கிறார்.