மௌனராகம் 2 – காதலா?? அண்ணனின் வாழ்க்கையா?? புரியாமல் தவிக்கும் தருணின் நிலை!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் தருணுக்கு இடி விழும் விதமாக சக்தி தான் அண்ணன் திருமணம் செய்துகொள்ள போகிறவர் என்று தெரிகிறது. சக்தியிடம் தனியாக சென்று பேசுகிறார். ஆனாலும் சக்தி பிடிகொடுக்கவில்லை.

மௌன ராகம் 2

மௌன ராகம் சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சக்தி வருணை திருமணம் செய்ய ஒத்துக்கொள்கிறார். இது ஸ்ருதிக்கு ஒரு பக்கம் சந்தோசமாக உள்ளது. ஆனால் கார்த்திக்கிற்கு இது சுத்தமாக பிடிக்கவும் இல்லை.

மேலும் காதம்பரிக்கு இதில் எதோ சூழ்ச்சி இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் தருண், தன் அண்ணன் திருமணம் செய்ய போகும் பெண்ணை பார்க்க ஆர்வமாக இருந்தார். கடைசியில் அது சக்தி என தெரிந்ததும் மனதுடைந்து போய்விட்டார். வருணுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சக்தியை திருமணம் செய்ய போகும் சந்தோசத்தில் உள்ளார் வருண். தனக்கு சக்தியை பிடித்திருப்பதாக தருணிடமே சொல்கிறார் வருண். தன் காதலா?? அல்லது அண்ணனின் வாழ்க்கையா?? என குழம்பி போயுள்ளார்.

வருண் சக்தியிடம் தான் பேச வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அதனால் அவரை அழைத்து வரும்படி தருணிடம் சொல்கிறார். இதனால் தருண் இடிந்து போய் விடுகிறார். சக்தியிடம் போய் கண்கலங்கி நிற்கிறார். எதுவும் பேசவும் முடியவில்லை. எல்லாம் கைமீறி போய்விட்டதாக சொல்கிறார்.

தஞ்சையில் உள்வாங்கிய கடல் – சிரமத்தில் மீனவர்கள்!!

சக்தியும் தான் எதையுமே ஆசைப்பட்டதில்லை, வாழ்க்கை போகும் போக்கில் வாழ பழகிவிட்டேன் என்றும் சொல்கிறார். சக்தி கீழே வர வருண் தன் மனதில் இருப்பதெல்லாம் கொட்டுகிறார். இதனை ஏற்கும் பக்குவத்தில் தருண் இல்லை. தன்னை பிடித்திருக்கிறதா?? என்றும் சக்தியிடம் கேட்கிறார். இத்தோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here