அமாவாசை என்பது ஆத்மகாரனான சூரியனும், மனோகரனான சந்திரனும் சந்திக்கும் நாள் ஆகும். ஆனால் இந்த தினத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிபுத்திசாலியாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. இப்பொழுது அமாவாசை தினத்தில் பிறப்பவர்கள் குணநலன்களை காணலாம்.
அமாவாசை:
அமாவாசை திதியிலும், பௌர்ணமி திதியிலும் தான் 9 கிரகங்களும் வலுவடையும். ஆனால் ஒரு குறிப்பிட்ட திதியில் பிறக்கும்போது ஒரு கிரகம் வலுவிழக்கும். அப்பொழுது ஒருவருக்கு திதி சௌபாக்கிய தோஷம் உண்டாகும். ஆனால் அமாவாசை திதி மற்றும் பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கு திதி சௌபாக்கிய தோஷம் ஏற்படாது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒவ்வொரு திதியிலும் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ராசி வலுவிழந்திருக்கும். அதாவது துதியை திதியில் பிறந்தவர்களுக்கு தனுசு, மகரம் வலுவிழந்திருக்கும். சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கு கும்பம், ரிஷபம் வலுவிழந்திருக்கும். எனவே தான் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கு எந்த சௌபாக்கிய தோஷமும் ஏற்படாது.
வீட்டில் இந்த இடத்தில் பணத்தை வைத்தால் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகுமாம்!!
இந்த அமாவாசை தினத்தன்று பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். இவர்களது திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். எனவே இவர்களே இவர்களுக்கு தலைவனாக கருதி கொள்வார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு மன வருத்தம் இருந்துகொண்டே இருக்கும். அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் அனைவரின் மனதையும் ஆட்கொள்ளும் திறனுடன் இருப்பர்.
இவர்களுக்கு தனித்துவமான குணங்கள் என்று அவர்களிடம் இருக்கும். ஒரு செயலில் இறங்கினால் வெற்றி அடையாமல் திரும்ப மாட்டார்கள். ஆனால் எந்த ஒரு விஷயத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள்.