வீட்டில் இந்த இடத்தில் பணத்தை வைத்தால் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகுமாம்!!

0
vastu-shastra-for-money-
vastu-shastra-for-money-

எவ்வளவு தான் சம்பாதித்தாலும் வீட்டில் பணம் தங்கவில்லை என பலரும் புலம்புவது உண்டு. ஏனெனில் பணத்தை சேகரிப்பதை பற்றி நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அது மிகவும் கஷ்டமான ஒன்று. இப்பொழுது சம்பாதித்த பணத்தை ஆன்மீக ரீதியில் எப்படி சேகரிப்பது என்று பார்க்கலாம்.

சேமிப்பு:

வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தை எந்த திசையில் வைப்பது?? எதில் வைப்பது?? என்று கூறப்பட்டுள்ளது. இதனை கடைபிடிப்பதன் மூலமாக நம் வாழக்கையிலும் வளம் பெறலாம். அந்த காலத்தில் இரும்பு பெட்டியில் பணத்தை பூட்டி வைத்திருப்பர். தேவைப்படும் போது எடுத்துக் கொள்வர்.

vastu-shastra-for-money-
vastu-shastra-for-money-

ஏனெனில் இரும்பு பெட்டிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது. 10 ஆயிரமோ அல்லது 1 லட்சமோ அந்த இரும்பு பெட்டியில் சேகரித்து வைத்தால் கண்டிப்பாக வீட்டில் பல மாற்றங்கள் ஏற்படும். மேலும் பெட்டியில் வைத்த பணத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

vastu-shastra-for-money-
vastu-shastra-for-money-

அதாவது குபேரனுக்கு சொந்தமான திசை வடக்கு திசை. அந்த திசையில் அந்த பண பெட்டியை வைக்க வேண்டும். சிலர் கடுகு டப்பாவில் போட்டு சமயலறையில் பணத்தை வைப்பர். இது முற்றிலும் தவறு. பணத்தை மஹாலக்ஷ்மியை போல கையாள வேண்டும். இதனை பூஜையறையில் வைக்க கூடாது. மேலும் இந்த பெட்டியை வாசலை நோக்கியும் வைக்க கூடாது. மேலும் பெட்டியில் பணத்தை வைக்கும்போது ஒரு நாணயத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து அதனுள் வைக்க வேண்டும்.

kubera-pommai
kubera-pommai

அதில் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றையும் வைத்தால் தெய்வீக மணம் வீசும். வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு போன்ற திசைகளில் பண பெட்டியை வைக்க கூடாது. மேலும் உங்களுக்கு பிடித்தவர்களிடமிருந்தோ , அல்லது ராசியானவர்களிடமிருந்தோ 1 ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொண்டு அதனை அந்த பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் சம்பளமாக வாங்கும் பணத்தை இவ்வாறு பராமரித்தால் வீட்டில் செல்வம் கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here