மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் மோகன்லால் தற்போது கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோகன்லால்:
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் மோகன்லால். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அந்த அளவிற்கு தனது நடிப்பு மூலம் ரசிகர்களை கட்டி வைத்துள்ளார் மோகன்லால். இவரது நடிப்பில் தற்போது வெளிவந்த படம் தான் த்ரிஷ்யம் 2. இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் பல தரப்பினராலும் இந்த படம் கவரப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்தியாவில் கடந்த 1ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோயாளிகளுக்கு கொரோனவிற்கான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தடுப்பூசியை போட்டுகொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தடுப்புசி போடும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
பாஜகவில் இணைகிறாரா நடிகர் அர்ஜுன்?? பாஜக தலைவருடன் சந்திப்பு!!
இந்நிலையில் தற்போது மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் கொரோனவிற்கான தடுப்பூசியை செலுத்தியுள்ளார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.