விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமாவும், லட்சுமியும் ஒன்றாக நடனமாட முதல் பரிசும் கிடைக்கிறது. மேலும் லட்சுமி கண்ணம்மாவின் மீது கோவித்து கொள்கிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது சௌந்தர்யா இன்ப அதிர்ச்சியில் மூழ்கி போயுள்ளார். மேலும் ஹேமாவும், லட்சுமியும் ஒன்றாக நடனமாடி அசத்தினர். பாரதியே தான் குழந்தை என்று தெரியாமல் இருவரையும் அரவணைத்துள்ளார். சௌந்தர்யாவுக்கும் இது மிகவும் சந்தோஷமாகிறது.
அடுத்ததாக வீட்டிற்கு வருகின்றனர். லட்சுமி ஏன் மேடைக்கு வரலை என்று கண்ணம்மா மீது கோவமடைகிறார். கண்ணம்மா எதையோ சொல்லி சமாளிக்கிறார். அடுத்ததாக சுமதி லக்ஷ்மியின் அப்பாவே அவருக்கு உதவி செய்கிறார் என்று சொல்ல கண்ணம்மாவிற்கு கோவம் வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அடுத்ததாக சுமதி வீட்டிற்கு செல்ல அங்கு சேகர் கொலைவெறியில் பார்க்கிறார். எவன் கூட ஊற சுத்திட்டு வர என்று கேட்கிறார். நான் அப்படி எல்லாம் எதுவும் பண்ணலை என்று சொல்ல அடிக்க செல்கிறார். சுமதியின் குழந்தை இதனை தடுக்க அந்த குழந்தையையும் அடிக்க செல்கிறார். இதனை எல்லாம் கண்ணம்மா பார்த்தும் விடுகிறார்.
கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட மோகன்லால் – வைரலாகும் புகைப்படம்!!
இந்த பக்கம் சௌந்தர்யா இன்று நடந்த நிகழ்வுகளை நினைத்து சந்தோஷமடைகிறார். அடுத்ததாக பாரதியும், வெண்பாவும் பேசி கொண்டுள்ளனர். அப்பொழுது வெண்பா பாரதியை சீண்டி விடுகிறார். கண்ணம்மா பெத்த குழந்தையா?? இருந்து இப்படி உதவி செய்வியா? என்று கேட்க பாரதி கோவமாகிறது. திரும்ப திரும்ப வெண்பா கேட்க கன்னத்தை சேர்த்து அறைகிறார்.
என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு இன்னோருத்தனுக்கு பிள்ளையை பெத்துக்குவா?? அவள் பெத்த பொண்ணுக்கு நான் எல்லாத்தையும் செய்யணுமா?? என்று கண்டபடி பேசிவிட்டு செல்கிறார். இதனால் வெண்பா சந்தோஷமடைகிறார்.