ஜனவரி 3ல் மதுரை வாருங்கள் – ஆதரவாளர்களுக்கு முக அழகிரி அழைப்பு!!

0

தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி மதுரைக்கு அழைத்துள்ளார். அப்போது அரசியல் நிலை குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.அழகிரி ஆலோசனை:

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி அவர்களின் மூத்த மகன் தான் முகஅழகிரி. இவர் திமுக கட்சியின் முன்னாள் அமைச்சராக திகழ்ந்தவர். கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2014ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து இவர் நீக்கப்பட்டார். அதன் பின்பு இவர் பாஜக அல்லது ரஜினியுடன் கூட்டணி வைக்கப் போவதாக கூறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அவர், தனது தாயாரின் உடல்நிலையை நேரில் கேட்டு அறிந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வரும் ஜனவரி 3ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும், தனது ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி ஆரம்பிக்க தயார் என்றும் கூறினார்,மேலும் விரைவில் ரஜினியை சந்திக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

தெலுங்கில் வெளியான மாஸ்டர் ‘சிட்டி ஸ்டோரி’ பாடல்

தற்போது அவர் கூறியது போலவே, தமிழகம் முழுவதும் இருக்கும் அவரது ஆதரவாளர்களை வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி அன்று மதுரையில் உள்ள பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ்க்கு அழைத்துள்ளார். இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த கூட்டத்தின் மூலம் இவர் தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா அல்லது யாருடனும் கூட்டணி சேரப் போகிறாரா என்று தெரியவரும். மேலும் நேற்று திமுகவுடன் கூட்டணி அமையுமா?? என்ற கேள்விக்கு அதற்கு வாய்ப்பில்லை எனவும் மேலும் திமுக தரப்பில் இருந்து அழைப்பு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here